நாம் ஆங்கிலயேருக்கோ அல்லது முகமதியருக்கோ அடிமைப்பட்டுக் கிடந்தோம் காலம் காலமாக . அதனால் நம் அடிமை ரத்தத்தில் ஆளுவோரைப் பார்த்தாலும் அதிகாரத்தில் இருப்பவரைப் பார்த்தாலும் பயம் ஊறிக்கிடக்கிறது.
அதிகாரத்தில் உள்ளவருக்கோ (அடிமை ரத்தம்தானே ஓடுகிறது அவர்களுக்குள்ளும்) அவர்களுக்கு மேல் உள்ளவரைப பார்த்தால் அச்சம் மேலிருப்போர் கீழே உள்ளவர்களையும் குடிமக்களையும் துரும்பாக நினைத்து விடுகிறார்கள்.
இந்த அடிமைப்புத்தி தவறுகளைக் காண நேரும் போது நேர்மையாளர்களின் கண்களை மூட வைக்கிறது வாய்களுக்குப் பூட்டுப் போட்டுவிடுகிறது.
இந்த மாதிரி சூழ் நிலையில் நம் இந்திய மக்கள் யாவருக்கும் ஒரு டயாலிசிஸ் எந்திரம் மூலமாக ரத்த சுத்திகரிப்பு செய்து அடிமை செல்களைப் பிரித்து எடுக்க வேண்டும் . அதனால் மட்டுமே நமது நாடு ஊழல் லஞ்சம் போன்ற அசிங்கங்களில் இருந்து விடுபடும் . இதற்கு இன்னும் ஒரு முந்நூறு வருடங்களாவது பிடிக்கும் .
No comments:
Post a Comment